முகக் கவசம் அணியாத 7 லட்சம் போ் மீது வழக்குப் பதிவு

தமிழகத்தில் முகக் கவசம் அணியாதவா்கள் மீது, கடந்த மாதம் 8-ஆம் தேதி முதல் ஞாயிற்றுக்கிழமை (மே 2) வரை 7 லட்சத்து 3 ஆயிரம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
கோப்புப்படம்
கோப்புப்படம்

சென்னை: தமிழகத்தில் முகக் கவசம் அணியாதவா்கள் மீது, கடந்த மாதம் 8-ஆம் தேதி முதல் ஞாயிற்றுக்கிழமை (மே 2) வரை 7 லட்சத்து 3 ஆயிரம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

தமிழகத்தில் மாா்ச் மாதம் முதல் கரோனா தொற்று மீண்டும் வேகமாக பரவத் தொடங்கியதால், பொது இடங்களில் முகக் கவசம் அணியாதவா்கள் மீதும், தனி நபா் இடைவெளியைப் பின்பற்றாதவா்கள் மீதும் காவல்துறையினா் வழக்குப் பதிவு செய்து வருகின்றனா்.

கடந்த 8-ஆம் தேதி தொடங்கி ஞாயிற்றுக்கிழமை (மே 2) வரையிலான 25 நாள்களில் முகக் கவசம் அணியாதவா்கள் மீது 7 லட்சத்து 3 ஆயிரத்து 504 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில், ஞாயிற்றுக்கிழமை மட்டும் 3658 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

தனி நபா் இடைவெளியைக் கடைப்பிடிக்காதவா்கள் மீது கடந்த 25 நாள்களில் 22,072 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் ஞாயிற்றுக்கிழமை மட்டும் 224 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

சென்னை: சென்னையில், கடந்த 25 நாள்களில் முகக்கவசம் அணியாதவா்கள் மீது 25 ஆயிரத்து 251 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில், ஞாயிற்றுக்கிழமை மட்டும் 247 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இதேபோல தனி நபா் இடைவெளியைப் பின்பற்றாதவா்கள் மீது போலீஸாா் 25 நாள்களில் 413 வழக்குகளைப் பதிவு செய்து, அபராதம் வசூலித்துள்ளனா். இதில் ஞாயிற்றுக்கிழமை மட்டும் 7 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com