சென்னையில் கரோனாவுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 33,222 ஆக அதிகரித்துள்ளது.
சென்னை மாநகராட்சி இன்று வெளியிட்டுள்ள கரோனா பாதிப்பு நிலவரப்படி சென்னையில் மொத்த கரோனா பாதிப்பு 3,58,573 ஆகவும் தற்போது கரோனாவுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 33,222 ஆகவும் அதிகரித்துள்ளது.
சென்னையில் இதுவரை கரோனாவுக்கு 4,894 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்த பாதிப்பான 3,58,573 பேரில் 3,20,457 பேர் குணமடைந்துள்ளனர்.
நேற்று(மே 4) மட்டும் 26,327 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
மண்டலவாரியாக கரோனா பாதிப்பு விவரத்தையும் சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது. இதில் அண்ணா நகர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், அம்பத்தூர், அடையாறு ஆகிய 5 மண்டலங்களில் கரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 3 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது.
மண்டலவாரியாக கரோனா பாதிப்பு