திருச்சி: திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் வட்டம், திருப்பைஞ்ஞீலி கிராமத்தைச் சேர்ந்த பத்திர எழுத்தரும், கணக்குப்பிள்ளையுமான த.குமாரசாமி (73) புதன்கிழமை அதிகாலை 5.15 மணிக்கு காலமானார்.
சிறிது நாள்களாக உடல்நலக்குறைவால் வீட்டிலிருந்தபடியே சிகிச்சை பெற்று வந்தார். இவருக்கு, தினமணி திருச்சி பதிப்பில் முதுநிலை உதவி ஆசிரியராக பணிபுரியும் கு. வைத்திலிங்கம் உள்பட 3 மகன்கள், 5 மகள்கள் மற்றும் பேரன், பேத்திகள் உள்ளனர்.
அவரது இறுதி சடங்குகள் திருப்பைஞ்ஞீலியில் உள்ள இல்லத்தில் பிற்பகல் 2 மணிக்கு மேல் நடைபெறுகிறது. தொடர்ந்து தகனம் செய்யப்படவுள்ளது. தொடர்புக்கு: 95009-69413.