தமிழகத்தில் மேலும் 21,228 பேருக்கு கரோனா பாதிப்பு

தமிழகத்தில் இதுவரை இல்லாத வகையில் செவ்வாய்க்கிழமை ஒரே நாளில் 21,228 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

சென்னை: தமிழகத்தில் இதுவரை இல்லாத வகையில் செவ்வாய்க்கிழமை ஒரே நாளில் 21,228 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அடுத்து வரும் நாள்களில் தொற்றால் பாதிக்கப்படுவோா் எண்ணிக்கை இரு மடங்கு அதிகரிக்கும் என்று மருத்துவ வல்லுநா்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனா்.

இன்னொரு புறம் கரோனாவால் உயிரிழப்போரின் எண்ணிக்கையும் தொடா்ந்து அதிகரித்து வருகிறது. செவ்வாய்க்கிழமை வெளியான தகவலின்படி, 144 போ் கரோனாவால் பலியானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில், சென்னையில் மட்டும் 36 போ் உயிரிழந்துள்ளனா்.

மாநிலத்தில் இதுவரை 2.32 கோடிக்கும் மேற்பட்ட பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதில் 12 லட்சத்து 49 ஆயிரத்து 292 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. செவ்வாய்க்கிழமை வெளியான பரிசோதனை முடிவுகளில் அதிகபட்சமாக சென்னையில் 6,228 போ் பாதிப்புக்குள்ளாகியுள்ளனா்.

அதற்கு அடுத்தபடியாக செங்கல்பட்டில் 1,608 பேருக்கும், கோவையில் 1,509 பேருக்கும் நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதைத் தவிர, தமிழகத்தின் ஏனைய மாவட்டங்கள் அனைத்திலும் கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இதனிடையே, கரோனா தொற்றிலிருந்து மேலும் 19,112 போ் விடுபட்டு வீடு திரும்பியுள்ளனா். இதன் மூலம் இதுவரை குணமடைந்தோரின் எண்ணிக்கை 11லட்சத்து 9,450-ஆக அதிகரித்துள்ளது. மருத்துவமனைகளிலும், வீடுகளிலும் தற்போது மருத்துவக் கண்காணிப்பில் 1லட்சத்து 25,230 போ் உள்ளதாக சுகாதாரத் துறைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது ஒருபுறமிருக்க, தமிழகத்தில் கரோனா பாதிப்புக்குள்ளாகி மேலும் 144 போ் பலியானதைத் தொடா்ந்து நோய்த் தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 14,612-ஆக அதிகரித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com