எதிர்க்கட்சித் தலைவர் தேர்வில் நீடிக்கும் இழுபறி: அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் ஒத்திவைப்பு

அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டம் மீண்டும் திங்கள்கிழமை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 
எதிர்க்கட்சித் தலைவர் தேர்வில் நீடிக்கும் இழுபறி: அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் ஒத்திவைப்பு

அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டம் மீண்டும் திங்கள்கிழமை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதுகுறித்து அதிமுக தலைமைக்கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டம் தலைமைக் கழகத்தில் வரும் 10ஆம் தேதி ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமையில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில், அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

இதனிடையே அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டம் இன்று மாலை நடைபெற்றது. இதில் கட்சி நிர்வாகிகள், சட்டப்பேரவை உறுப்பினர்கள் பங்கேற்றனர். இந்தக் கூட்டத்தில் தோல்விக்கான காரணங்கள், எதிர்க்கட்சித் தலைவர் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து காரசார விவாதம் நடைபெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது. சுமார் 4 மணிநேரம் நடந்த எம்எல்ஏக்கள் கூட்டத்தில் முடிவு ஏதும் எடுக்கப்படாததால் கூட்டம் மீண்டும் திங்கள்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டது.

கூட்டத்தை தொடர்ந்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் ஜெயலலிதா நினைவிடத்துக்கு சென்று மரியாதை செலுத்தினர். அப்போது ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் ஆதரவாளர்கள் கோஷங்கள் எழுப்பியதால் சற்று பரபரப்பு நிலவியது.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com