தமிழகத்தில் பால் கொள்முதல் விலையை உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
கொள்முதல் விலையில் பசும்பால் விலை லிட்டருக்கு ரூ. 4 உயர்த்தியும், எருமைப்பாலின் விலை லிட்டருக்கு ரூ. 6 உயர்த்தியும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இதன் மூலம் எருமைப்பாலின் விலை லிட்டருக்கு ரூ.41-ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதேபோன்று பசும்பால் கொள்முதல் விலை ரூ.32-ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
விலைக்குறைப்பு உத்தரவு வரும் 16-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.