தமிழகத்தில் கரோனா தொற்று அதிகமுள்ள 14 மாவட்டங்களில் தடுப்புப் பணிக்காக அமைச்சர்கள் குழு நியமிக்கப்பட்டுள்ளனர்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையின் முதல் கூட்டம் தலைமைச் செயலகத்தில் இன்று நடைபெற்றது. கூட்டத்தில் கரோனா நோய்த் தொற்று தொடா்பாக விவாதிக்கப்பட்டது.
அப்போது, கரோனா தொற்று அதிகமாக உள்ள மாவட்டங்களில் சிறப்புக் கவனம் செலுத்திடவும், அரசால் அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கினை முழுமையாக நடைமுறைப்படுத்துவதை உறுதி செய்திடவும், கரோனா நோய்த் தடுப்பு மற்றும் சிகிச்சைகள் தொடர்பான ஒருங்கிணைப்புப் பணிகளை மேற்கொள்ளவும், அமைச்சர்களை நியமனம் செய்து ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
இதன்படி,