தற்காலிக பேரவைத் தலைவராக கு. பிச்சாண்டி பதவியேற்பு

தமிழக சட்டப்பேரவையின் தற்காலிக சட்டப்பேரவைத் தலைவராக கு.பிச்சாண்டி பதவியேற்றுக் கொண்டார்.
தற்காலிக பேரவைத் தலைவராக கு. பிச்சாண்டி பதவியேற்பு

சென்னை: தமிழக சட்டப்பேரவையின் தற்காலிக சட்டப்பேரவைத் தலைவராக கு.பிச்சாண்டி பதவியேற்றுக் கொண்டார்.

கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில், தற்காலிக பேரவைத் தலைவர் கு. பிச்சாண்டிக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பதவிப் பிரமாணம் செய்து வத்தார். விழாவில் முதல்வர் ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.

தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டம் மே 11ஆம் தேதி நடைபெறுகிறது. அந்த கூட்டத்தில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சட்டப்பேரவை உறுப்பினர்கள் நாளை பதவியேற்றுக் கொள்வார்கள். அவர்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைக்க தற்காலிக சட்டப்பேரவைத் தலைவராக கீழ்பெண்ணத்தூர் தொகுதியில் வெற்றி பெற்ற கு.பிச்சாண்டி தேர்வு செய்யப்பட்டு இன்று பதவியேற்றுக் கொண்டார்.

எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்ற பின், மே 12ஆம் தேதி புதிய சட்டப்பேரவைத் தலைவரை தேர்தெடுக்கவுள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com