சென்னையில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தை இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே.பழனிசாமி சந்தித்தார்.
சென்னையில் உள்ள அவரது இல்லத்திற்கு சென்ற பழனிசாமி, எதிர்க்கட்சித் தலைவராக தேர்வு செய்யப்பட்டதைன் பிறகு பன்னீர்செல்வத்தை நேரில் சென்று சந்தித்துள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவரை தேர்வு செய்வதில், எடப்பாடி பழனிசாமிக்கும், ஓ. பன்னீர்செல்வத்துக்கும் இடையே கடும் போட்டி நிலவிய நிலையில், இன்று காலை நடைபெற்ற அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தில், தமிழக சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார்.