டாஸ்மாக்: சனி ரூ.426.24 கோடிக்கும், ஞாயிறு ரூ.428.69 கோடிக்கும் மது விற்பனை

தமிழகத்திதில் உள்ள டாஸ்மாக் கடைகளில் நேற்று ஒரேநாளில் மட்டும் ரூ.428.69 கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளது. 
டாஸ்மாக்: சனி ரூ.426.24 கோடிக்கும், ஞாயிறு ரூ.428.69 கோடிக்கும் மது விற்பனை

தமிழகத்திதில் உள்ள டாஸ்மாக் கடைகளில் நேற்று ஒரேநாளில் மட்டும் ரூ.428.69 கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் கரோனா வேகமாகப் பரவி வருகிறது. நோய்த் தாக்கத்தை கட்டுப்படுத்துவதற்கு திங்கள்கிழமை முதல் வரும் 24-ஆம் தேதி வரை முழு பொதுமுடக்கத்தை அரசு அறிவித்தது. முழு பொதுமுடக்கம் காரணமாக சனி, ஞாயிற்றுக்கிழமை அனைத்து கடைகளும், காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும் என அறிவிக்கப்பட்டது. அதே போல் டாஸ்மாக் கடைகள் காலை 8 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும் என அரசு அறிவித்தது. 

இதனால், மக்கள் சனி, ஞாயிறுகிழமைகளில் மளிகை, காய்கறி உட்பட அனைத்து கடைகளிலும் அதிகளவில் குவிந்து தங்களுக்கு தேவையான பொருட்களை மொத்தமாக வாங்கிச் சென்றனா். அதே போல், டாஸ்மாக் கடைகளும் மூடப்படும் என்பதால் மதுப்பிரியா்கள் மதுக்கடைகள் முன்பு நீண்ட வரிசையில் காத்திருந்து அதிக அளவில் மதுபாட்டில்களை வாங்கிச் சென்றனா். இந்த நிலையில், தமிழகத்திதில் உள்ள டாஸ்மாக் கடைகளில் நேற்று ஒரேநாளில் மட்டும் ரூ.428.69 கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளது. 

அதிகபட்சமாக சென்னையில் மட்டும் ரூ.98.96 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. அதேபோல் மதுரையில் ரூ.97.62 கோடிக்கும், திருச்சியில் 87.65 கோடிக்கும், சேலத்தில் ரூ.76.57 கோடிக்கும், கோவையில் 67.89 கோடிக்கும் மது விற்பனையாகியுள்ளது. சனிக்கிழமை ரூ.426.24 கோடிக்கு மதுவிற்கப்பட்ட நிலையில் ஞாயிறன்று ரூ.428.69 கோடிக்கு மது விற்பனையாகியுள்ளது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com