விவசாய நிலங்களில் உயர்மின்கோபுரங்கள் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்

விவசாயிகளுக்கு முன்னறிவிப்பு வழங்காமல் விவசாய நிலங்களில் உயர்மின்கோபுரங்கள் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து சங்ககிரி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில்  விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். 
விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி சங்ககிரி வருவாய் கோட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள். 
விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி சங்ககிரி வருவாய் கோட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள். 

விவசாயிகளுக்கு முன்னறிவிப்பு வழங்காமல் விவசாய நிலங்களில் உயர்மின்கோபுரங்கள் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து சங்ககிரி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில்  விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். 

சேலம் மாவட்டம் சங்ககிரி வருவாய் கோட்டாட்சியர் கோ.வேடியப்பனிடம் தமிழ்நாடு விவசாயிகள் ஒருங்கிணைந்த சங்கங்களின் கூட்டமைப்பின் மாநில நிர்வாகி பெருமாள், சேலம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் எ.ராமமூர்த்தி ஆகியோர் அளித்துள்ள கோரிக்கை மனுவில் கூறியுள்ளதாவது:-

சேலம் மாவட்டம், சங்ககிரி வட்டம் தேவூர் துணை மின்நிலையத்திலிருந்து எடப்பாடி வட்டம், குரும்பபப்பட்டியில் உள்ள துணை மின் நிலையத்திற்கு மின்சாரம் கொண்டு செல்ல 110 கிலோவாட் திறன் கொண்ட மின்பாதை அமைப்பதற்கு திங்கள், செவ்வாய் ஆகிய இரு நாள்களிலும்  தமிழ்நாடு மின்வாரிய அதிகாரிகள் உரிய விவசாயிகளுக்கு முன்னறிவிப்பு ஏதுவும் வழங்காமல் கனரக வாகன இயந்திரங்களுடன் சென்று விவசாய நிலங்களில் குழிதோண்டியுள்ளனர்.

சங்ககிரி வருவாய் கோட்டாட்சியர் கோ.வேடியப்பனிடம் விவசாயிகள் ஒருங்கிணைந்த சங்கங்களின் கூட்டமைப்பின் மாநில நிர்வாகி பெருமாள், ஏ.ராமமூர்த்தி ஆகியோர் விவசாயிகளின் கோரிக்கையை எடுத்துரைக்கின்றனர். 
சங்ககிரி வருவாய் கோட்டாட்சியர் கோ.வேடியப்பனிடம் விவசாயிகள் ஒருங்கிணைந்த சங்கங்களின் கூட்டமைப்பின் மாநில நிர்வாகி பெருமாள், ஏ.ராமமூர்த்தி ஆகியோர் விவசாயிகளின் கோரிக்கையை எடுத்துரைக்கின்றனர். 

அதனை அறிந்த விவசாயிகள் அப்பணிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து பணிகளை நிறுத்தினர். விவசாயிகளுக்கு எந்தவிதமான முன்னறிவிப்பும் அளிக்காமல் அரசு முழு பொது முடக்கம் அறிவித்துள்ள நிலையில் வெளி ஆட்களை கொண்டு இத்திட்டத்தை நிறைவேற்ற முயற்சி செய்வது கரோனா தொற்று கிராமங்களிலும் பரவும் நிலை ஏற்படும்.

எனவே தமிழக அரசு முழு பொதுமுடக்கம் அறிவித்துள்ள சூழ்நிலையில் இத்திட்டத்தை உடனடியாக நிறுத்திவைக்கவும், விவசாய விளைநிலங்கள் பாதிக்காமல் சாலையோரமாக குழாய் அமைத்து கேபிள் மூலம் இத்திட்டத்தை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டுமென அதில் கூறியுள்ளனர். மேலும் அவர்கள்  விவசாய நிலங்களில் மின் பாதை அமைப்பதற்கான முன்னறிவிப்பு வழங்காமல் பணிகளை மேற்கொள்ளக் கூடாது எனவும் முழு ஊரடங்கு முடிவடையும் வரை இத்திட்டத்தை நிறுத்தி வைக்க உத்தரவிட வேண்டுமென கோரி வருவாய் கோட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு விவசாயிகள் ஒருங்கிணைந்த சங்கத்தின் கூட்டமைப்பின் நிர்வாகிகள், சேலம் மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் சி.எஸ்.ஜெயக்குமார் உள்ளிட்ட பல்வேறு விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com