மீனவ சமுதாயத்தவரை மீனவளத்துறை அமைச்சராக நியமிக்க கோரிக்கை

மீனவ சமுதாயத்தைச் சேர்ந்தவரை தமிழக மீன்வளத்துறை அமைச்சராக நியமிக்க வேண்டும் என தமிழ்நாடு கடலோர மீனவர் நலச்சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. 
மீன்பிடி துறைமுகம்
மீன்பிடி துறைமுகம்

சிதம்பரம்: மீனவ சமுதாயத்தைச் சேர்ந்தவரை தமிழக மீன்வளத்துறை அமைச்சராக நியமிக்க வேண்டும் என தமிழ்நாடு கடலோர மீனவர் நலச்சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

சிதம்பரம் அருகே பரங்கிப்பேட்டை அன்னங்கோயில் மீன்பிடித் துறைமுக வளாகத்தில் கடலோர மீனவர் நலச்சங்க நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.  தலைவர் ஏ.மணிவண்ணன் தலைமை வகித்தார். செயலாளர் கின்னஸ் வைத்தி.கார்த்திகேயன் முன்னிலை வகித்தார். நிர்வாகிகள் மோகன், ஜெயராமன். விவேகானந்தன், அருண்பிரகாஷ் உள்ளிட்டர் பங்கேற்றனர்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்: மீன்வளத்துறையை, மீனவர் நலத்துறை என அறிவித்த தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவிப்பது, மீனவ நலத்துறை அமைச்சராக கடலோரா மீனவரை நியமிக்க வேண்டும், மீனவர்களின் கஷ்டங்களை அறிந்த மீனவர் சமுதாயத்தைச் சேர்ந்த திருவெற்றியூர் கே.பி.சங்கரை மீனவ நலத்துறை அமைச்சராக நியமிக்க வேண்டும் கோரிக்கை என்று கோரிக்கை விடுத்துள்ளகோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com