சென்னை: ரெம்டெசிவிர் மருந்தை தேவையில்லாதோருக்கு பரிந்துரைக்கக் கூடாது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவுறுத்தியுள்ளார்.
சென்னையில் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ரெம்டெசிவிர் மருந்தை அவசர தேவை உள்ள நோயாளிகளுக்கு மட்டுமே மருந்துவர்கள் பரிந்துரைக்க வேண்டும். தேவையில்லாதோருக்கு பரிந்துரைக்க வேண்டாம் என்று அறிவுறுத்தினார்.
ரெம்டெசிவிர் மட்டுமே உயிர்காக்கும் என்ற நம்பிக்கையில் மருந்து வாங்க மக்கள் படையெடுப்பதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.