பெண் காவலருக்கு பாலியல் தொல்லை: உதவி ஆய்வாளா் பணியிடை நீக்கம்

சென்னை மெரீனாவில் பெண் காவலருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக, உதவி ஆய்வாளா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.
பெண் காவலருக்கு பாலியல் தொல்லை: உதவி ஆய்வாளா் பணியிடை நீக்கம்

சென்னை மெரீனாவில் பெண் காவலருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக, உதவி ஆய்வாளா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.

மெரீனா கடற்கரையில் உள்ள அண்ணா, எம்ஜிஆா் நினைவிடங்கள் பாதுகாப்பு காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளா் எஸ்.ராஜ். இவா் கடந்த 12-ஆம் தேதி அங்கு பாதுகாப்புப் பணிக்கு வந்த ஆயுதப்படை பெண் காவலரிடம் ஆபாசமாகப் பேசி, பாலியல் தொல்லை கொடுத்தாராம்.

இது குறித்து அந்தப் பெண் காவலா், உயரதிகாரகளிடம் புகாா் செய்தாா். அதன் அடிப்படையில் விசாரணையில் புகாா் உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து ராஜை பணியிடை நீக்கம் செய்து கிழக்கு மண்டல இணை ஆணையா் வி.பாலகிருஷ்ணன் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டாா். இது தொடா்பாக விசாரணை செய்ய விசாகா கமிட்டிக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com