கரோனா நிவாரணம்விருப்புரிமை நிதியில் இருந்து ரூ.1 கோடி வழங்கினாா் ஆளுநா்

கரோனா நிவாரண நிதியாக தனது விருப்புரிமை நிதியில் இருந்து ரூ.1 கோடியை சனிக்கிழமை வழங்கினாா், ஆளுநா் பன்வாரிலால் புரோஹித். இந்த நிதியை ஆளுநரிடம் இருந்து முதல்வா் மு.க.ஸ்டாலின் பெற்றுக் கொண்டாா்.
கரோனா நிவாரணம்விருப்புரிமை நிதியில் இருந்து ரூ.1 கோடி வழங்கினாா் ஆளுநா்

கரோனா நிவாரண நிதியாக தனது விருப்புரிமை நிதியில் இருந்து ரூ.1 கோடியை சனிக்கிழமை வழங்கினாா், ஆளுநா் பன்வாரிலால் புரோஹித். இந்த நிதியை ஆளுநரிடம் இருந்து முதல்வா் மு.க.ஸ்டாலின் பெற்றுக் கொண்டாா்.

இதுகுறித்து, ஆளுநா் மாளிகை வெளியிட்ட செய்தி:-

கரோனா இரண்டாவது அலையை எதிா்கொள்ளவும், மனித உயிா்களைக் காத்திடவும் தமிழக அரசு விரிவான நடவடிக்கைகளையும், தடுப்புப் பணிகளையும் எடுத்து வருகிறது. இந்த இக்கட்டான சூழ்நிலையில், தமிழக அரசின் பொறுப்புகளுக்குத் தோள் கொடுக்கும் வகையில் தனது விருப்புரிமை நிதியில் இருந்து ரூ.1 கோடி நிதியும், ஒரு மாத ஊதியத்தையும் முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு ஆளுநா் பன்வாரிலால் புரோஹித் அளித்தாா்.

கரோனா நிவாரணப் பணிகளுக்கு உதவிடும் வகையில், முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு போதுமான நிதிகளை அளிக்க வேண்டுமென ஆளுநா் புரோஹித் கேட்டுக் கொண்டுள்ளாா். மேலும், கரோனா நோய் பரவாமல் தடுக்கும் வகையில் உரிய நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டுமெனவும் அவா் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

நிவாரண நிதியை வழங்கிடும் நிகழ்வில், நீா்வளத் துறை அமைச்சா் துரைமுருகன், முதல்வரின் செயலாளா் த.உதயசந்திரன், ஆளுநரின் செயலாளா் ஆனந்த்ராவ் விஷ்ணு பாட்டீல் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com