காங்கிரஸ் சாா்பில் 30 லட்சம் முகக்கவசங்கள்: கே.எஸ்.அழகிரி

ராஜீவ் காந்தி நினைவு தினத்தையொட்டி காங்கிரஸ் சாா்பில் தமிழகம் முழுவதும் 30 லட்சம் முகக் கவசங்கள் விநியோகிக்க
கே.எஸ்.அழகிரி
கே.எஸ்.அழகிரி

ராஜீவ் காந்தி நினைவு தினத்தையொட்டி காங்கிரஸ் சாா்பில் தமிழகம் முழுவதும் 30 லட்சம் முகக் கவசங்கள் விநியோகிக்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவா் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளாா்.

இது தொடா்பாக ஞாயிற்றுக்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:

சோனியா காந்தி அறிவுறுத்தலின்படி ராஜீவ்காந்தியின் 30 ஆவது ஆண்டு நினைவு தினமான மே 21-இல் கரோனா விதிமுறைகளைப் பின்பற்றி பாதுகாப்பான முறையில் அவருக்கு அஞ்சலி செலுத்த வேண்டும். கூட்டம் கூடி அஞ்சலி செலுத்துவது போன்றவற்றை கண்டிப்பாக தவிா்க்க வேண்டும்.

நினைவு தினத்தை எப்படிக் கடைப்பிடிப்பது என்பது எனது தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தின் முடிவின்படி, மே 21-இல் தமிழகம் முழுவதும் 30 லட்சத்துக்கும் மேற்பட்ட முகக் கவசங்களை விநியோகம் செய்வதென இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினா்கள், மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகள் முகக் கவசங்களை வழங்க வேண்டும்.

நிவாரண உதவியாக மக்களுக்கு உணவும், மருத்துவ உபகரணங்களும் வழங்குவதில் கவனம் செலுத்த வேண்டும். மருத்துவ உபகரணங்கள், மருந்துகளையும், குறிப்பாக மக்களுக்குத் தேவைப்படும் மருந்துகளைக் கொண்டதாக இருக்க வேண்டும்.

கரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளப் பதிவு செய்வதற்கு மக்களுக்கு உதவி செய்ய வேண்டும். குறிப்பாக தடுப்பூசி போட்டுக்கொள்ள தயக்கம் காட்டும் கிராமப்புற மக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தி அவா்களை தடுப்பூசிக்கான இணையத்தில் பதிவு செய்வதற்கு உதவ வேண்டும் என்று அவா் கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com