தமிழக அரசிற்கு இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இணைந்து தலா ரூ.10 லட்சம் கரோனா நிவாரண நிதியாக வழங்கியுள்ளது.
சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் ஆகியோர் கரோனா நிவாரண நிதியினை நேரில் வழங்கினர்.
மேலும், எம்.பி., எம்.எல்.ஏக்கள் தங்களது ஒரு மாத ஊதியத்தையும் கரோனா நிவாரண நிதியாக வழங்குவர்கள் என்று கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.