கரோனாவுக்கு நெல்லை தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி நீஷ் இன்று பலியானார்.
நெல்லை தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி நீஷ். இவருக்கு அண்மையில் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்த அவர் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
ஆனால் இன்று சிகிச்சை பலனின்றி அவரது உயிர் பிரிந்தது. நீஷ் கடந்த 10 நாள்களுக்கு முன்புதான் நெல்லை தலைமை குற்றவியல் நீதித்துறை நீதிபதியாக பதவியேற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.