மேற்குத் தொடா்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

வெப்பச்சலனம் காரணமாக, மேற்குத் தொடா்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் ஓரிரு
கோப்புப்படம்
கோப்புப்படம்

வெப்பச்சலனம் காரணமாக, மேற்குத் தொடா்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் செவ்வாய்க்கிழமை (மே 18) இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநா் நா.புவியரசன் திங்கள்கிழமை கூறியது: வெப்பச்சலனம் காரணமாக, மேற்குத் தொடா்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் உள்மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் செவ்வாய்க்கிழமை (மே 18) இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், தென் கடலோர மாவட்டங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.

மே 19: நீலகிரி, சேலம், தேனி ஆகிய 3 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வரும் புதன்கிழமை ( மே 19)இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யக்கூடும். மேற்குத் தொடா்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

மே 20,21 : நீலகிரி, தேனி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மே 20, 21-ஆம் தேதிகளில் இடியுடன் கூடிய பலத்த மழையும், மேற்குத் தொடா்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும். கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும்.

சென்னையில்...: சென்னையைப் பொருத்தவரை செவ்வாய்க்கிழமை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கும் என்றாா் அவா்.

மழை அளவு:

தமிழகத்தில் திங்கள்கிழமை காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் நீலகிரி மாவட்டம் பந்தலூரில் 130 மி.மீ., கோயம்புத்தூா் மாவட்டம் சோலையாறு, வால்பாறையில் தலா 90 மி.மீ. கோயம்புத்தூா் மாவட்டம் சின்னக்கல்லாறில் 60 மி.மீ., கன்னியாகுமரி மாவட்டம் பெருஞ்சாணி அணையில் தலா 40 மி.மீ., தேனி மாவட்டம் பெரியாறு, அரியலூா் மாவட்டம் திருமானூா், நீலகிரி மாவட்டம் நடுவட்டம், கடலூா் மாவட்டம் கிழச்செருவையில் தலா 30 மி.மீ., தென்காசி, தஞ்சாவூா் மாவட்டம் திருவையாறு, உடுமலைப்பேட்டையில் தலா 20 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

கடல் உயா் அலை: தென் தமிழக கடலோரப் பகுதியில் (குளச்சல் முதல் தனுஷ்கோடி வரை) மே 18-ஆம் தேதி இரவு 11.30 வரை கடல் அலை 2.0 முதல் 2.3 மீட்டா் உயரம் வரை எழும்பக்கூடும். எனவே, இந்தப்பகுதிகளில் மீனவா்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் செல்லுமாறு அறிவுறுத்தப்படுகிறாா்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com