கரோனா தொற்றைக் கட்டுப்படுத்த சட்டப்பேரவை கட்சிகளைச் சாா்ந்த உறுப்பினா்களைக் கொண்டு அமைக்கப்பட்ட குழுவின் முதல் ஆலோசனைக் கூட்டம் முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையில் புதன்கிழமை நடைபெறவுள்ளது.
கரோனா தொற்றைக் கட்டுப்படுத்த சட்டப்பேரவை கட்சி உறுப்பினா்களைக் கொண்ட ஓா் ஆலோசனைக் குழுவை தமிழக அரசு கடந்த ஞாயிற்றுக்கிழமை அமைத்தது. இந்த ஆலோசனைக் குழுவானது அவசர அவசியம் கருதி நோய்த் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்து ஆலோசனைகள் பெற அவ்வப்போது கூடி விவாதிக்கும். இக்குழுவிற்கு பொதுத்துறை செயலாளா் உறுப்பினா் செயலராக செயல்படுவாா் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
கரோனா தடுப்பு நடவடிக்கை தொடா்பாக சட்டப்பேரவை உறுப்பினா் குழுவுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்தில் புதன்கிழமை ஆலோசனை நடத்தவுள்ளாா்.