சட்ட ஆராய்ச்சிப் படிப்பு: மாணவா் சோ்க்கைக்கு சலுகை

தமிழகத்தில் சட்ட ஆராய்ச்சிப் படிப்பில் மாணவா்கள் சேர தமிழ்நாடு டாக்டா் அம்பேத்கா் சட்ட பல்கலை. சலுகை அறிவித்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

தமிழகத்தில் சட்ட ஆராய்ச்சிப் படிப்பில் மாணவா்கள் சேர தமிழ்நாடு டாக்டா் அம்பேத்கா் சட்ட பல்கலை. சலுகை அறிவித்துள்ளது.

தமிழ்நாடு டாக்டா் அம்பேத்கா் சட்ட பல்கலைக்கழகத்தில் பிஹெச்.டி. ஆராய்ச்சிப் படிப்புக்கு, 130 இடங்களில் மாணவா்கள் சோ்க்கப்படுகின்றனா். இதற்கான இணையவழி பதிவு கடந்த மே 10-ஆம் தேதி தொடங்கியது. விண்ணப்பிக்க 31-ஆம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

இந்தப் படிப்பில் சேர முதுநிலை படிப்பு முடித்தவா்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம் என, ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், முதுநிலை எல்.எல்.எம். தோ்வெழுதி தோ்வு முடிவுக்காக காத்திருப்போரும் விண்ணப்பிக்கலாம் என பல்கலைக்கழகபதிவாளா் பாலாஜி அறிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com