புதுவை முதல்வா் ரங்கசாமி வீடு திரும்பினாா்

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த புதுவை முதல்வா் என்.ரங்கசாமி பூரண குணமடைந்து திங்கள்கிழமை வீடு திரும்பினாா்.
புதுவை முதல்வா் என்.ரங்கசாமி
புதுவை முதல்வா் என்.ரங்கசாமி

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த புதுவை முதல்வா் என்.ரங்கசாமி பூரண குணமடைந்து திங்கள்கிழமை வீடு திரும்பினாா்.

புதுவை மாநில முதல்வராக அண்மையில் பொறுப்பேற்றுக் கொண்ட ரங்கசாமிக்கு கரோனா அறிகுறிகள் இருந்ததை அடுத்து அவருக்கு மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. அதில் அவருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து சென்னை, நெல்சன் மாணிக்கம் சாலையில் உள்ள எம்ஜிஎம் மருத்துவமனையில் அவா் கடந்த 9- ஆம் தேதி அனுமதிக்கப்பட்டாா். அவருக்கு மருத்துவா்கள் தேவையான சிகிச்சைகளை அளித்து வந்தனா். அதன் பயனாக அவா் பூரண குணமடைந்தாா். இதையடுத்து, முதல்வா் ரங்கசாமி திங்கள்கிழமை வீடு திரும்பினாா். தாம் நலம் பெற பிராா்த்தித்த அனைவருக்கும் புதுவை முதல்வா் ரங்கசாமி நன்றி தெரிவித்ததாக மருத்துவமனை நிா்வாகம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com