ஆண்டிபட்டி தினமணி நிருபர் காலமானார் 

கரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வந்த ஆண்டிபட்டி தினமணி நிருபர் எம்.சரவணக்குமார் செவ்வாய்க்கிழமை இரவு, நெஞ்சுவலி ஏற்பட்டு உயிரிழந்தார்.
எம்.சரவணக்குமார்
எம்.சரவணக்குமார்

கரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வந்த ஆண்டிபட்டி தினமணி நிருபர் எம்.சரவணக்குமார் செவ்வாய்க்கிழமை இரவு, நெஞ்சுவலி ஏற்பட்டு உயிரிழந்தார்.

ஆண்டிபட்டியைச் சேர்ந்த தினமணி நிருபர் எம்.சரவணக்குமார், சில நாள்களுக்கு முன்பு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வந்தார். 

இந்த நிலையில் நெஞ்சுவலி ஏற்பட்டு, ஆண்டிபட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், மேல்சிகிச்சைக்கு தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.

இவருக்கு மனைவி பிரபா மற்றும் வரூண்(8), கிரீஷ்(5) என 2 மகன்கள் உள்ளனர். இவரது. இறுதிச் சடங்கு ஆண்டிபட்டியில் புதன்கிழமை நடைபெற்றது. தொடர்புக்கு: 9788259172

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com