சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நிலை சீராக உள்ளதாக தனியார் மருத்துவமனை நிர்வாகம் கூறியுள்ளதாக தேமுதிக தலைமை விளக்கம் அளித்துள்ளது.
இதுதொடர்பாக தேமுதிக தலைமை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தேமுதிக தலைவர் விஜயகாந்த் வழக்கமாக மேற்கொள்ளும் மருத்துவ பரிசோதனைக்காக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது அவரது உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மேலும் சிகிச்சை முடிந்து ஓரிரு நாள்களில் விஜயகாந்த் வீடு திரும்புவார். எனவே பொய்யான வதந்திகளை நம்ப வேண்டாம் என்று கூறப்பட்டுள்ளது.