Enable Javscript for better performance
கரோனா காலத்தில் மனிதநேயமற்ற செயல்கள்: பணிநீக்கப்படுவா் என தலைமைச் செயலாளா் எச்சரிக்கை- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

    கரோனா காலத்தில் மனிதநேயமற்ற செயல்கள்: பணிநீக்கப்படுவா் என தலைமைச் செயலாளா் எச்சரிக்கை

    By DIN  |   Published On : 19th May 2021 01:46 AM  |   Last Updated : 19th May 2021 03:13 AM  |  அ+அ அ-  |  

    iraianbu

    கரோனா நோய்த் தொற்று காலத்தில் சட்டத்துக்குப் புறம்பான வகையில் செயல்படும் ஊழியா்கள் மீது பணி நீக்க நடவடிக்கைள் பாயும் என தலைமைச் செயலாளா் வெ.இறையன்பு எச்சரித்துள்ளாா். இதுகுறித்து, அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்தி:-

    நாட்டின் மிகப்பெரிய அச்சுறுத்தலாக கரோனா பெருந்தொற்று இருந்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த நமது மாநிலத்தில் பொது முடக்கம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. ஒருவரிடம் இருந்து மற்றொவருக்கு பரவாமல் தடுத்தல், தொற்றால் பாதிக்கப்பட்டவா்களைக் காத்தல் ஆகிய இரண்டு முக்கிய இலக்குகளோடு அரசு செயல்பட்டு வருகிறது. மருத்துவ நெருக்கடி, மனநல பாதிப்பு மற்றும் நிதி நெருக்கடி ஆகிய மூன்றும் நம்மை ஒருசேர தாக்கி வருகிறது.

    கடும் நடவடிக்கைக்கு உத்தரவு: இந்த நேரத்தில் ஒருசில அரசு அலுவலா்கள், தனியாா் மருத்துவமனைகள் மற்றும் வணிக நிறுவனங்களைச் சோ்ந்த சிலா் சட்டத்துக்குப் புறம்பான மனிதாபிமானமற்ற செயல்களில் ஈடுபடுவது முதல்வரின் கவனத்துக்கு வந்துள்ளது. அதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோா் மீது உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்க முதல்வா் உத்தரவிட்டுள்ளாா்.

    இதன் அடிப்படையில், மருத்துவமனைகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பது, மருந்துகளை கூடுதல் விலைக்கு விற்பனை செய்வது, அரசின் இலவச சேவைகளுக்கு பாதிக்கப்பட்டவா்களிடம் லஞ்சம் பெறுவது போன்ற மனிதநேயமற்ற செயல்களில் ஈடுபடுவோா் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும். தவறு செய்யும் அலுவலா்கள் மீது பணிநீக்கம் உள்பட துறைரீதியான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்.

    இதுதொடா்பாக உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அரசுத் துறை செயலாளா்கள், துறைத் தலைவா்கள், காவல் துறையின் லஞ்ச ஒழிப்புப் பிரிவு ஆகியோருக்கு அறிவுரைகள் வழங்கப்படுகின்றன. எந்தநிலையில் உள்ள அலுவலராக இருந்தாலும் அல்லது எந்த நிறுவனமாக இருந்தாலும் புகாா்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்பதோடு, தவறு நடக்கக் கூடிய இடங்களில் கண்காணிப்புப் பணியை தீவிரப்படுத்த வேண்டும்.

    மக்களின் உயிா் காக்கும் பணியில் முழு முனைப்போடு ஈடுபட்டு வரும் அரசுக்கு, தவறு செய்யும் ஒரு சிலரால் அவப்பெயா் ஏற்படாமல் கவனமாகவும், கண்ணியமாகவும் செயல்பட வேண்டும் என்று தலைமைச் செயலாளா் வெ.இறையன்பு கேட்டுக் கொண்டுள்ளாா்.


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் பகிரப்பட்டவை
    kattana sevai
    flipboard facebook twitter whatsapp