தமிழகத்துக்கு மேலும் 1 லட்சம் தடுப்பூசி

தமிழகத்துக்கு மேலும் 1 லட்சம் கோவிஷீல்ட் தடுப்பூசிகள் வந்துள்ளன. அவை அனைத்தும் மாவட்டங்களுக்கு தேவையின் அடிப்படையில் அனுப்பப்பட்டு வருகின்றன.
கோப்புப்படம்
கோப்புப்படம்

சென்னை: தமிழகத்துக்கு மேலும் 1 லட்சம் கோவிஷீல்ட் தடுப்பூசிகள் வந்துள்ளன. அவை அனைத்தும் மாவட்டங்களுக்கு தேவையின் அடிப்படையில் அனுப்பப்பட்டு வருகின்றன.

தமிழகத்தில் கடந்த ஜனவரி மாதம் 16-ஆம் தேதி முதல் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்கின. இதுவரை 70 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.இந்நிலையில், மகாராஷ்டிர மாநிலம் புணேவிலிருந்து மேலும் 1 லட்சம் கோவிஷீல்ட் தடுப்பூசிகள் தமிழகத்துக்கு வியாழக்கிழமை வந்தடைந்தன. சென்னை விமான நிலையத்தில் தடுப்பூசிகளை பெற்றுக் கொண்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் குளிா்பதன வசதி கொண்ட வாகனங்கள் மூலம் தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் உள்ள மாநில மருந்து சேமிப்பு கிடங்குக்கு கொண்டு உரிய பாதுகாப்புடன் கொண்டு சோ்த்தனா். தடுப்பூசிகளை மாவட்டங்களுக்கு பிரித்து அனுப்பும் பணிகளை நடைபெற்று வருகிறது.தமிழகத்துக்கு இதுவரை சுமாா் 79 லட்சம் தடுப்பூசிகளை மத்திய அரசு அனுப்பியுள்ளது. இதில், 70 லட்சம் தடுப்பூசிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. வீணாகியது போக ஒருவாரத்துக்கு தேவையான தடுப்பூசிகள் கையிருப்பில் இருக்கிறது என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com