சென்னை: தமிழகத்தில் கருப்பு பூஞ்சை பாதிப்பை அறிவிக்கை செய்யப்பட்ட நோயாக மாநில ஆளுநா் பன்வாரிலால் புரோஹித் அறிவித்துள்ளாா். அதன்படி, மாநிலத்தில் எங்கு அத்தகைய பாதிப்பு கண்டறியப்பட்டாலும் அது குறித்த விவரங்களை அரசுக்குத் தெரியப்படுத்த வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.