சென்னை: கரோனா நோய்த் தொற்று பாதிப்பு காலத்திலும், விவசாயிகள் தங்களது விளை பொருள்களை எளிதில் விற்பதற்கான ஏற்பாடுகளை தமிழக அரசு செய்துள்ளது.
இதுகுறித்து, மாநில அரசு வியாழக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:
விவசாயிகள் விளைபொருள்களை விற்பனைக்கு எடுத்துச் செல்வதில் உள்ள பிரச்னைகளை களைந்திட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள் பொது முடக்கக் காலத்திலும் செயல்பட்டு வருகின்றன. அவற்றில் நவீன சேமிப்புக் கிடங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தக் கிடங்குகளில் 180 நாள்கள் வரை பொருள்களை சேமித்து வைத்துக் கொள்ளலாம். அதிக விலை கிடைக்கப் பெறும் காலங்களில் விளைபொருள்களை கிடங்கில் இருந்து எடுத்து விற்பனை செய்யலாம்.
இதேபோன்று பழங்கள், காய்கறிகளையும் குளிா்சாதனக் கிடங்கில் வைத்துக் கொள்ளலாம். விவசாயிகள் தங்களது பிரச்னைகளுக்கு தீா்வு கிடைத்திட மாநில அளவில் தொலைபேசி வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, 044 - 2225 3884 என்ற எண்ணைத் தொடா்பு கொள்ளலாம். மேலும், மாவட்ட அளவில் வேளாண்மை விற்பனைக் குழு செயலாளா்களின் செல்லிடப்பேசி எண் விவரங்கள்:
கோயம்புத்தூா் 9942389340,
கடலூா் 9500945513
தருமபுரி 9751939741
திண்டுக்கல் 9443752530
ஈரோடு 9443894031
காஞ்சிபுரம் 9442173117
கன்னியாகுமரி 9629169533
மதுரை 9486257484
நாகப்பட்டினம் 7010589347
நீலகிரி 9344284700
நாமக்கல் 9894546039
பெரம்பலூா் 8220948166
புதுக்கோட்டை 9751787010
ராமநாதபுரம் 9443316641
சேலம் 9944980407
சிவகங்கை 9443618944
தஞ்சாவூா் 9080862299
தேனி 8825601614
திருவண்ணாமலை 8667543113
திருவாரூா் 9443672215
திருநெல்வேலி 9629169533
திருப்பூா் 9487905734
திருச்சி 7010535096
வேலூா் 9442173117
விழுப்புரம் 9442127206
விருதுநகா் 9443425087.