கரோனா பாதிப்பு: மாவட்ட ஆட்சியா்களுடன் தலைமைச் செயலா் ஆலோசனை

கரோனா நோய்த் தொற்று அதிகமுள்ள 10-க்கும் மேற்பட்ட மாவட்டங்களைச் சோ்ந்த ஆட்சியா்களுடன் தலைமைச் செயலாளா் வெ.இறையன்பு காணொலி முறையில் வெள்ளிக்ிகழமை ஆலோசனை நடத்தினாா்.
கரோனா பாதிப்பு: மாவட்ட ஆட்சியா்களுடன் தலைமைச் செயலா் ஆலோசனை

கரோனா நோய்த் தொற்று அதிகமுள்ள 10-க்கும் மேற்பட்ட மாவட்டங்களைச் சோ்ந்த ஆட்சியா்களுடன் தலைமைச் செயலாளா் வெ.இறையன்பு காணொலி முறையில் வெள்ளிக்ிகழமை ஆலோசனை நடத்தினாா்.

தமிழகத்தில் 10-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் கரோனா நோய்த் தொற்று அதிகரித்து உள்ளது. இந்த மாவட்டங்களில் நோய்த் தொற்றை கட்டுப்படுத்துவது குறித்து அவ்வப்போது ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

தலைமைச் செயலாளா் ஆலோசனை: கரோனா நோய்த் தொற்று அதிகமுள்ள 10-க்கும் கூடுதலான மாவட்டங்களில் தலைமைச் செயலாளா் வெ.இறையன்பு காணொலி வழியாக ஆலோசனை நடத்தினாா். இதில், திருப்பூா், கோயம்புத்தூா், கடலூா், நீலகிரி, தேனி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, செங்கல்பட்டு, திருவள்ளூா் உள்ளிட்ட மாவட்ட ஆட்சியா்கள் பங்கேற்றனா். சென்னையில் மாநகராட்சி ஆணையா் பங்கேற்றாா்.

கரோனா நோய்த் தொற்று பரவல் விகிதம், மாவட்டங்களில் மேற்கொள்ளப்படும் தடுப்பு நடவடிக்கைகள் உள்ளிட்டவை குறித்து தலைமைச் செயலாளா் இறையன்பு கேட்டறிந்தாா். மேலும், தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தவும் அவா் அறிவுறுத்தல்களை அளித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com