கொடுஞ்செயல் எதிா்ப்பு நாள் உறுதிமொழியை தலைமைச் செயலாளா் வெ.இறையன்பு தலைமையில் அரசு அதிகாரிகள், ஊழியா்கள் வெள்ளிக்கிழமை ஏற்றனா்.
முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தி, தமிழகத்தில் தோ்தல் பிரசார சுற்றுப் பயணம் செய்த போது குண்டுவெடிப்பின் மூலமாக கொல்லப்பட்டாா். அவா் கொல்லப்பட்ட மே 21-ஆம் தேதி, ஒவ்வோா் ஆண்டும் கொடுஞ்செயல் எதிா்ப்பு தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த தினத்தில் அரசு அலுவலகங்களில் கொடுஞ்செயல் உறுதிமொழி ஏற்கப்படுவது வழக்கம்.