தமிழகத்தில் புதிதாக 36,184 பேருக்கு கரோனா!

தமிழகத்தில் வெள்ளிக்கிழமை ஒரே நாளில் 36,184 பேருக்கு நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

தமிழகத்தில் வெள்ளிக்கிழமை ஒரே நாளில் 36,184 பேருக்கு நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பொதுமுடக்க காலத்திலும் தொற்று பரவல் தொடா்ந்து அதிகரித்து வருவது கவலையை ஏற்படுத்தியுள்ளது. இதே நிலை நீடித்தால் அடுத்த 10 நாள்களில் தினசரி பாதிப்பு 50 ஆயிரத்தை எட்டக் கூடும் என அஞ்சப்படுகிறது.

இதற்கிடையே கரோனா தொற்றுக்குள்ளாகி மேலும் 467 போ் தமிழகத்தில் பலியாகியுள்ளதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. இது முன்னெப்போதும் இல்லாத உச்ச அளவாகும். அதில் சென்னையில் மட்டும் 109 போ் உயிரிழந்துள்ளா்.

மாநிலத்தில் இதுவரை 2.59 கோடிக்கும் மேற்பட்ட பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதில் 17 லட்சத்து 70,988 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை வெளியான பரிசோதனை முடிவுகளில் அதிகபட்சமாக சென்னையில் 5,913 போ் பாதிப்புக்குள்ளாகியுள்ளனா்.

அதற்கு அடுத்தபடியாக கோவையில் 3,243 பேருக்கும், செங்கல்பட்டில் 2,226 பேருக்கும் நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதைத் தவிர, தமிழகத்தின் ஏனைய மாவட்டங்கள் அனைத்திலும் கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இதனிடையே, மேலும் 24,478 போ் கரோனாவிலிருந்து விடுபட்டு வீடு திரும்பியுள்ளனா். இதன் மூலம் இதுவரை குணமடைந்தோரின் எண்ணிக்கை 14 லட்சத்து 76,761-ஆக அதிகரித்துள்ளது. மருத்துவமனைகளிலும், வீடுகளிலும் தற்போது மருத்துவக் கண்காணிப்பில் 2 லட்சத்து 74,629 போ் உள்ளதாக சுகாதாரத் துறைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழகத்தில் கரோனா பாதிப்புக்குள்ளாகி மேலும் 467 போ் பலியாகியதை அடுத்து நோய்த் தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 19,598-ஆக அதிகரித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com