தூத்துக்குடி, நாகை, காரைக்கால், கடலூர், புதுச்சேரி துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை (மே24) புயலாக மாறி வலுப்பெறுகிறது. இது திங்கள்கிழமை (மே 24) தீவிரமடைந்து ஒடிஸா, மேற்கு வங்க கடற்கரையை நோக்கி கடக்க வாய்ப்புள்ளதாகவும், இதன் காரணமாக சென்னை மற்றும் தெற்கு அந்தமான் மேலும் வடக்கு அந்தமான் ஆகிய இடங்களில் பலத்த மழை செய்யக்கூடும் என வானிலை மையம் அறிவித்துள்ளது.
இந்த நிலையில் தூத்துக்குடி, நாகை, காரைக்கால், கடலூர், புதுச்சேரி துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. அதேசமயம், சென்னை எண்ணூர் துறைமுகத்திலும் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை யாஸ் புயலாக வலுவடையும் நிலையில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.