அத்தியாவசியப் பொருள்களைத் தடையின்றி விநியோகம் செய்ய வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
ஊரடங்கு காலத்தில் மக்களுக்குத் தேவையான அத்தியாவசிய பொருள்கள் மக்களுக்கு தடையின்றி கிடைப்பது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார்.
தலைமைச் செயலகத்தில் நடைபெற இந்த ஆலோசனையில், ஊர்டங்கில் பொதுமக்களுக்காக அத்தியாவசியப் பொருள்களைத் தடையின்றி விநியோகம் செய்ய வேண்டும்.
முழு ஊரடங்கில் மக்கள் கட்டுப்பாடுகளை மீறாத வகையில் அவர்களுக்குத் தேவையான காய்கறிகள், பழங்கள், பால் போன்றவற்றை விநியோகம் செய்ய வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி, வேளாண் துறை ஐஏஎஸ், தோட்டக்கலைத் துறை ஐஏஎஸ் அதிகாரி உள்ளிட்டோர் கலந்துகொண்டுள்ளனர்.