புதுச்சேரியில் புதிதாக 1,321 பேருக்கு கரோனா தொற்று பதிவாகியுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதன் மூலம் புதுச்சேரியில் ஒட்டுமொத்த கரோனா பாதிப்பு 1 லட்சத்தை நெருங்கியுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் கரோனாவுக்கு 27 பேர் பலியானதைத் தொடர்ந்து மொத்த பலி எண்ணிக்கை 1,435 ஆக உயர்ந்துள்ளது.
இதுதொடர்பாக புதுச்சேரி சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலின்படி,
புதுவையில் இதுவரை கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 99,540 ஆக உயர்ந்துள்ளது. பலி எண்ணிக்கை 1,435 ஆனது. ஒரேநாளில் 9,032 கரோனா சோதனைகள் மேற்கொண்டுள்ளனர். இதையடுத்து தொற்று உறுதி செய்யப்படும் விகிதம் 14.62 சதவீதமாகக் குறைந்து உள்ளது. தற்போது கரோனா பாதித்து மருத்துவ சிகிச்சையில் 14,842 பேர் உள்ளனர்.