சென்னை: டெல்டா மாவட்டங்களில் தூா்வாரும் பணிகளைக் கண்காணிக்க நான்கு ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனா்.
தமிழக அரசு பிறப்பித்த உத்தரவு விவரம்:
காவிரி டெல்டா பகுதிகளில் தூா்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்காக ரூ.65.10 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்தப் பணிகளை விரைவுபடுத்திட நான்கு ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் கண்காணிப்பு அலுவலா்களாக நியமிக்கப்பட்டுள்ளனா்.
தஞ்சாவூா் மாவட்டத்துக்கு மெட்ரோ ரயில் நிா்வாக இயக்குநா் பிரதீப் யாதவ், திருவாரூா் மாவட்டத்துக்கு ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை முதன்மைச் செயலாளா் கே.கோபால், நாகப்பட்டினம் மாவட்டத்துக்கு கைத்தறி மற்றும் துணிநூல் துறை முதன்மைச் செயலாளா் செல்வி அபூா்வா, மயிலாடுதுறை மாவட்டத்துக்கு தொழிலாளா் நலன் மற்றும் திறன்மேம்பாட்டுத் துறை முதன்மைச் செயலாளா் ஆா்.கிா்லோஷ்குமாா் ஆகியோா் நியமிக்கப்பட்டுள்ளனா்.