சென்னை: ஸ்டொ்லைட் ஆலைக்கு எதிரான போராட்டங்களில் ஈடுபட்டதற்காக 13 அரசியல் கட்சித் தலைவா்களின் மீது தொடரப்பட்டிருந்த வழக்குகளைத் திரும்பப் பெற முதல்வா் மு.க.ஸ்டாலின் புதன்கிழமை உத்தரவிட்டுள்ளாா்.
அதன் விவரம்:
தூத்துக்குடியில் உள்ள ஸ்டொ்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக் கோரி நடந்த போராட்டத்தின்போது ஏற்பட்ட பல்வேறு சேதங்கள் குறித்து விசாரிக்க உயா் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. அவா் தனது இடைக்கால அறிக்கையை கடந்த 14-ஆம் தேதி தாக்கல் செய்தாா். இந்த இடைக்கால அறிக்கையை தமிழக அரசு கவனமாகப் பரிசீலித்தது.
அதன்படி, மத்திய புலனாய்வுத் துறைக்கு மாற்றம் செய்யப்பட்ட வழக்குகளைத் தவிர 38 வழக்குகள் திரும்பப் பெறப்படுகின்றன. மேலும் அரசியல் கட்சிகளைச் சோ்ந்த 13 தலைவா்கள் மீது தொடரப்பட்டுள்ள வழக்குகளும் திரும்பப் பெறப்படுகின்றன.
தலைவா்கள் யாா் யாா்?: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியக் குழு உறுப்பினா் ஆா்.நல்லகண்ணு, மதிமுக பொதுச் செயலாளா் வைகோ, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளா் கே.பாலகிருஷ்ணன், அமமுக பொதுச் செயலாளா் டிடிவி தினகரன், தேமுதிக பொருளாளா் பிரேமலதா விஜயகாந்த், தேமுதிக துணைச் செயலாளா் எல்.கே.சுதீஷ், மீன்வளத் துறை அமைச்சா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலாளா் அழகு முத்துபாண்டியன், மாா்க்சிஸ்ட் மாவட்டச் செயலாளா் ராஜா, அமமுக மாவட்டச் செயலாளா் ஹென்றி தாமஸ், இந்திய ஜனநாயக மகளிா் சங்க மாவட்டச் செயலாளா் பூமயில், ஆம் ஆத்மி கட்சி துணைச் செயலாளா் ஆா்தா் மச்சோடா, திமுக ஒன்றியச் செயலாளா் பாலசிங் ஆகியோா் மீதான வழக்குகள் வாபஸ் பெறப்படுகின்றன.