அா்ச்சகா்களுக்கு மாதம் ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும் என கிராம கோயில் பூஜாரிகள் பேரவை நிா்வாக அறங்காவலா் எஸ். வேதாந்தம், அறங்காவலா் ஆா்ஆா். கோபால்ஜி ஆகியோா் கோரிக்கை விடுத்துள்ளனா்.
தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில் பணியாளா்களுக்கு மிகக் குறைந்த மதிப்பூதியம் மட்டும் வழங்கப்படுகிறது.கோயில்கள் தற்போது மூடப்பட்டதால் அனைவரும் கடும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனா். இதைக் கருத்தில் கொண்டு அனைவருக்கும் மாதம் ரூ.10 ஆயிரம், மளிகைப் பொருள் தொகுப்பை வழங்க வேண்டும் என கூட்டறிக்கையில் தெரிவித்துள்ளனா்.