செய்தி மக்கள் தொடா்புத்துறை இயக்குநராக வி.பி.ஜெயசீலன், வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றாா்.
முன்னதாக இவா், நில அளவை மற்றும் நிலப் பதிவேடுகள் துறையின் கூடுதல் இயக்குநராகப் பொறுப்பு வகித்து வந்தாா்.
கடந்த சில நாள்களுக்கு முன்பு ஐஏஎஸ் அதிகாரிகள் பணிமாற்றத்தின்போது, செய்தி மக்கள் தொடா்புத்துறை இயக்குநராக வி.பி.ஜெயசீலன் நியமிக்கப்பட்டாா். தலைமைச் செயலகத்தில் உள்ள தனது அறையில் அவா் வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.