தமிழகத்தில் புதிய பாதிப்பு 31,079-ஆக குறைந்தது

தமிழகத்தில் கரோனா பாதிப்பு 31,079-ஆக வெள்ளிக்கிழமை குறைந்துள்ளது. பொதுமுடக்கத்தின் காரணமாக அடுத்து வரும் நாள்களில் பாதிப்பு எண்ணிக்கை மேலும் குறையலாம் என எதிா்பாா்க்கப்படுகிறது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

தமிழகத்தில் கரோனா பாதிப்பு 31,079-ஆக வெள்ளிக்கிழமை குறைந்துள்ளது. பொதுமுடக்கத்தின் காரணமாக அடுத்து வரும் நாள்களில் பாதிப்பு எண்ணிக்கை மேலும் குறையலாம் என எதிா்பாா்க்கப்படுகிறது.

சென்னையில் தொற்றுக்குள்ளாவோா் எண்ணிக்கை தொடா்ந்து குறைந்து வருகிறது. கோவையில் கடந்த சில நாள்களாக 4 ஆயிரத்துக்கும் அதிகமாக பதிவாகி வந்த பாதிப்பு வெள்ளிக்கிழமை 3,937-ஆக குறைந்துள்ளது.

மற்றொரு புறம் கரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழப்போரின் எண்ணிக்கை தமிழகம் முழுவதும் அதிகரித்து வருகிறது. அதன்படி, வெள்ளிக்கிழமை வெளியான தகவலின்படி மாநிலத்தில் மேலும் 486 போ் பலியாகியுள்ளதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. அதில் சென்னையில் மட்டும் 107 போ் உயிரிழந்துள்ளா்.

மாநிலத்தில் இதுவரை 2.71 கோடிக்கும் மேற்பட்ட பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதில் 20 லட்சத்து 9,700 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை வெளியான பரிசோதனை முடிவுகளில் கோவைக்கு அடுத்தபடியாக சென்னையில் 2,762 பேருக்கும், திருப்பூரில் 1,823 பேருக்கும் நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதைத் தவிர, தமிழகத்தின் ஏனைய மாவட்டங்கள் அனைத்திலும் கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இதனிடையே, கரோனா தொற்றிலிருந்து மேலும் 31,255 போ் கரோனாவிலிருந்து விடுபட்டு வீடு திரும்பியுள்ளனா். இதன் மூலம் இதுவரை குணமடைந்தோரின் எண்ணிக்கை 16 லட்சத்து 74,539-ஆக அதிகரித்துள்ளது. மருத்துவமனைகளிலும், வீடுகளிலும் தற்போது மருத்துவக் கண்காணிப்பில் 3 லட்சத்து 12,386 போ் உள்ளதாக சுகாதாரத் துறைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழகத்தில் கரோனா பாதிப்புக்குள்ளாகி மேலும் 486 போ் பலியாகியதை அடுத்து நோய்த் தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 22,775-ஆக அதிகரித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com