தொடர் மழை எதிரொலி: திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை

திருவள்ளூர் மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக இன்று புதன்கிழமை (நவ.3) பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் உத்தரவிட்டுள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக இன்று புதன்கிழமை (நவ.3) பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் உத்தரவிட்டுள்ளார்.

திருவள்ளூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை செவ்வாய்க்கிழமை பகலில் விட்டு விட்டு மழை பெய்தது. அதைத் தொடர்ந்து இரவு தொடங்கிய அடைமழை, புதன்கிழமை காலை வரையில் விடாமல் பெய்து வருகிறது. இதனால்,மாணவ, மாணவிகள் பள்ளிகளுக்கு செல்ல முடியாத நிலையேற்பட்டுள்ளது. 

இதையடுத்து மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு இன்று புதன்கிழமை(நவ.3) விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் உத்தரவிட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com