தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக பள்ளிகளுக்கு மட்டும் இன்று புதன்கிழமை விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை நேற்று செவ்வாய்க்கிழமை விட்டு விட்டு மழை பெய்தது. அதைத் தொடர்ந்து இரவு தொடங்கிய தொடர் மழை, புதன்கிழமை காலை வரையிலும் விடாமல் பெய்து வருகிறது. இதனால்,மாணவ, மாணவிகள் பள்ளிகளுக்கு செல்ல முடியாத நிலையேற்பட்டுள்ளது.
இதையடுத்து மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு இன்று புதன்கிழமை(நவ.3) விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் உத்தரவிட்டுள்ளார்.