சென்னை, டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:
தமிழகத்தில் இன்று கடலூர், அரியலூர், பெரம்பலூர், சேலம், ஈரோடு , நீலகிரி மற்றும் டெல்டா மாவட்டங்களில் இன்று இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.
இதையும் படிக்க | மகளிருக்கு ஏற்ற பண்ணைக் கருவிகள் - ஓர் அறிமுகம்
தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பல்வேறு இடங்களில் மழை பெய்யக்கூடும்.
சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்தில் பல்வேறு இடங்களில் இடியுடன் கனமழை பெய்யக்கூடும். வெப்பநிலை அதிகபட்சமாக 29 டிகிரி செல்சியஸாகவும், குறைந்தபட்ச வெப்பநிலையாக 25 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும் நிலவும்.
இன்றும், நாளையும் அரபிக் கடலில் தென்கிழக்கு, கேரளம், கர்நாடகம் கரையோரம், லட்சத்தீவு பகுதிகளில் பலத்த சூறாவளி காற்று வீசக்கூடும்.
இதையும் படிக்க | கம்பத்தில் அமைச்சர் துரைமுருகன் காரை மறித்து விவசாயிகள் மனு
மழையளவு: திருநெல்வேலி மாவட்டம் சேரன்மாதேவியில் அதிகபட்சமாக 13 செ.மீ, அம்பாசமுத்திரத்தில் 9 செ.மீ, பாளையங்கோட்டியில் 8 செ,மீ, நாங்குநேரியில் 7 செ.மீ, குமரி மாவட்டத்தின் பெருஞ்சா அணையில் 7 செ.மீ மழையும் பதிவாகி உள்ளது.