திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ்பவர்கள் வழக்குத் தொடர அனுமதியில்லை என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்னையில் ஜோசப் பேபி என்பவரைப் பிரிந்த கலைச்செல்வி அவருடன் சேர்த்து வைக்கக் கோரிய மனுவில் திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ்பவர்கள் குடும்ப நல நீதிமன்றத்தில் சட்டரீதியாக வழக்குத் தொடர உரிமையில்லை என நீதிபதி வைத்திய நாதன் தெரிவித்தார்.
மேலும் இந்த வழக்குத் தள்ளுபடி செய்யப்பட்டது.