தமிழகத்தில் புதிதாக 862 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழக கரோனா பாதிப்பு நாளுக்குநாள் குறைந்து வருகிறது. புதிதாக 862 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து, மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 27,08,230 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் 1,009 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 26,61,428 பேர் குணமடைந்துள்ளனர்.
இதையும் படிக்க | ரஷியா தினசரி கரோனா பாதிப்பில் புதிய உச்சம்
7 தனியார் மருத்துவமனைகளிலும், 3 பேர் அரசு மருத்துவமனைகளிலும் நோய்த் தொற்று காரணமாக உயிரிழந்துள்ளனர். இதைத் தொடர்ந்து, மொத்த பலி எண்ணிக்கை 36,214 ஆக உயர்ந்துள்ளது.
இன்றைய நிலவரப்படி 10,588 பேர் இன்னும் நோய்த் தொற்றுக்கான சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
சென்னையில் புதிதாக 122 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.