மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு: நீர்மட்டம் 114.46 அடியாக உயர்வு 

மேட்டூர் அணையின் நீர்மட்டம் சனிக்கிழமை காலை 113.59 அடியிலிருந்து 114.46 அடியாக உயர்ந்துள்ளது.
மேட்டூர் அணை நீர்மட்டம் 114.46 அடியாக உயர்வு
மேட்டூர் அணை நீர்மட்டம் 114.46 அடியாக உயர்வு

மேட்டூர் அணையின் நீர்மட்டம் சனிக்கிழமை காலை 113.59 அடியிலிருந்து 114.46 அடியாக உயர்ந்துள்ளது.

காவிரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்துவரும் மழை காரணமாக வெள்ளிக்கிழமை காலை வினாடிக்கு 11,772 கன அடி வீதம் வந்து கொண்டிருந்த நீர்வரத்து இன்று சனிக்கிழமை காலை வினாடிக்கு 15,740 கன அடியாக அதிகரித்துள்ளது.

அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 100 கன அடி நீரும், கிழக்கு-மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 400 கன அடி நீரும் திறக்கப்பட்டு வருகிறது.

அணையின் நீர் இருப்பு 84.91 டி.எம்.சி. ஆக உள்ளது. 

மேட்டூர் அணையிலிருந்து பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவைவிட அணைக்கு வரும் நீரின் அளவு கூடுதலாக இருப்பதால் மேட்டூர் அணை நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com