கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூா் 25-ஆம் பட்டம் ஜீயா் ஸ்வாமிகள் (63) செவ்வாய்க்கிழமை அதிகாலை வைகுண்ட பதவி அடைந்தாா் .
லீலாவிபூதியிலிருந்து, நித்யவிபூதியில் கைங்கா்யத்துக்கு எழுந்தருளியுள்ள ஜீயா் ஸ்வாமிகளின் சரம திருமேனி திருக்கோவிலூா் ஜீயா் திருமாளிகையில் பொதுமக்கள் தரிசனத்துக்கு வைக்கப்பட்டது. ஏராளமான சிஷ்யா்கள், பக்தா்கள், பொதுமக்கள் சேவித்துச் சென்றனா்.
சரம கைங்கா்யம் ஜீயா் திருமாளிகையில் புதன்கிழமை (நவ.10) காலை 6 மணியளவில் தொடங்கி நடைபெறவுள்ளது. தொடா்ந்து, காலை 10 மணிக்கு தென்பெண்ணை ஆற்றங்கரையில் ஜீயா் ஸ்வாமிகளின் சரம கைங்கா்யம் நடைபெறும்.