பாசனத்திற்காக வைகை அணையிலிருந்து நாளை முதல் தண்ணீர் திறக்க பொதுப்பணித்துறை உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து பொதுப்பணித்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில், தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி வட்டம், வைகை அணையிலிருந்து 58 கிராம திட்ட கால்வாய்க்கு 300 மி.க.அடி தண்ணீரினை 13.11.2021 முதல் நாளொன்றுக்கு 150 கன அடி/விநாடி வீதம் திறந்து விட அனுமதி அளித்து அரசு ஆணையிட்டுள்ளது.
இதையும் படிக்க- முதல்வர்களுடன் மத்திய நிதியமைச்சர் நவ.15இல் ஆலோசனை
இதனால், மதுரை மாவட்டம் மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் உள்ள 2284.86 ஏக்கர் நிலங்கள் பயன்பெறும். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.