கடலூர்: கடந்த அதிமுக ஆட்சியின் போது உள்நோக்கத்துடன் இடமாற்றம் செய்யப்பட்ட தொழிலாளியை மீண்டும் பழைய பணியிடத்திலேயே இடமாறுதல் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை சிஐடியு வலியுறுத்தி போராட்டம் அறிவித்திருந்தது.
ஆனால், நிர்வாகம் பேச்சுவார்த்தை நடத்தாததைத் தொடர்ந்து இன்று குடும்பத்தினருடன் கடலூர் மண்டல போக்குவரத்து மேலாளர் அலுவலகத்தில் குடும்பத்தினருடன் முற்றுகையில் ஈடுபட்டனர்.
மேலாளர் அலுவலகத்திற்குள் நுழைய முயன்ற நிலையில் அவர்களை காவலர்கள் தடுத்ததால் அவர்கள் நுழைவு வாயிலில் அமர்ந்து கோஷம் எழுப்பினர்.