தமிழகத்தில் புதிதாக 782 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது புதன்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழக கரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய தரவுகளை மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. புதிதாக 782 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து, மாநிலத்தில் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 27,17,203 ஆக உயர்ந்துள்ளது.
இதையும் படிக்க | திருவள்ளூரில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை
மேலும் 907 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 13 பேர் நோய்த் தொற்றுக்கு பலியாகியுள்ளனர்.
அதிகபட்சமாக சென்னையில் 116 பேருக்கும், கோவையில் 115 பேருக்கும் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.