சென்னை: அடுத்த 3 மணி நேரத்தில் தமிழகத்தின் சென்னை உள்ளிட்ட 11 மாவட்டங்களில் மழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இது குறித்து மாநில பேரிடர் மேலாண்மை வாரியம் தனது சுட்டுரைப் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் எச்சரிக்கைச் செய்தியில், திருவள்ளூர், கடலூர், ஈரோடு, காஞ்சிபுரம், மைலாடுதுறை, நாகப்பட்டினம், நாமக்கல், ராணிப்பேட்டை, வேலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பரவலாக கனமழை பெய்து வரும் நிலையில், அடுத்த 3 மணி நேரத்துக்கு மழை நீடிக்கும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டிருப்பது மக்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.